Links News Contact Us About us Privacy Terms FAQ Add feedback Invite a friend Bookmark
Home Members Videos Music Photos
Articles
SIVAPURANAM - LYRICS
12-29-11

THIRUCHCHIRRAMBALAM
 

SIVAPURANAM

 
(THIRUPPERUNDHURAIYIL ARULIYADHU
 THARCHIRAPPUP PAYIRAM)
 
NAMACHCHIVAYA VAZGA NADHAN THAL VAZGA
IMAIPPOZUDHUM EN NENYCHIL NINGADHAN THAL VAZGA
KOGAZI ANDA KURUMANIDHAN THAL VAZGA
AGAMAM AGININRU ANNIPPAN THAL VAZGA
EGAN ANEGAN IRAIVAN ADIVAZGA                          
 
VEGAM KEDUTHTHANDA VENDHAN ADIVELGA
PIRAPPARUKKUM PINYNYAGANDHAN PEYGAZALGAL VELGA
PURANDHARKKUCH CHEYON THAN PUNGAZALGAL VELGA
KARANGUVIVAR ULMAGIZUM KONGAZALGAL VELGA
CHIRAMGUVIVAR ONGUVIKKUM CHIRON KAZAL VELGA       
 
ISAN ADI POTRI  ENDHAI ADI POTRI
THESAN ADI POTRI  SIVAN CHEVADI POTRI
NEYATHTHE NINRA NIMALAN ADI POTRI
MAYAP PIRAPPU ARUKKUM MANNAN ADI POTRI
SEERAR PERUNDHURAI  NAM THEVAN ADI POTRI              
 ARADHA INBAM ARULUM MALAI POTRI  
 
CHIVAN AVAN ENCHINDHAIYUL NINRA ADHANAL
AVAN ARULALE AVAN THAL VANANGICH
CHINDHAI MAGIZACH CHIVA PURANAM THANNAI
MUNDHAI VINAIMUZUDHUM OYA URAIPPAN YAN.                  
 
KAN NUDHALAN THANGARUNAIK KANGATTA VANDHU EYDHI
ENNUDHARKU ETTA EZIL ARGAZAL IRAINYCHI
VIN NIRAINDHUM MAN NIRAINDHUM MIKKAY, VILANGU OLIYAY,
EN IRANDHU ELLAI ILADHANE  NIN PERUMCHIR
POLLA VINAIYEN PUGAZUMARU ONRU ARIYEN             
 
PULLAGIP PUDAYP PUZUVAY MARAMAGIP
PAL VIRUGAMAGIP PARAVAIYAYP PAMBAGIK
KALLAY MANIDHARAYP PEYAYK KANANGALAY
VAL ACHURAR AGI MUNIVARAYTH THEVARAYCH
CHELLAA NINRA ITH THAVARA CHANGAMATHTHUL                 
 
ELLAP PIRAPPUM PIRANDHU ILAITHTHEN, EMBERUMAN
MEYYE UN PON ADIGAL KANDU INRU VIDU URREN
UYYA EN ULLATHTHUL ONGARAMAY NINRA
MEYYA  VIMALA  VIDAIPPAGA  VEDHANGAL
AIYA  ENAVONGI AZNDHU AGANRA NUNNIYANE              
 
VEYYAY, THANIYAY, IYAMANANAM VIMALA
POY AYINA ELLAM POY AGALA VANDHARULI
MEY NYANAM AGI MILIR KINRA MEYCH CHUDARE
ENYNYANAM ILLADHEN INBAP PERUMANE
ANYNYANAM THANNAI AGALVIKKUM NAL ARIVE              
 
 AKKAM ALAVU IRUDHI ILLAY, ANAITHTHU ULAGUM
 AKKUVAY KAPPAY AZPPAY ARUL THARUVAY
POKKUVAY ENNAIP PUGUVIPPAY NIN THOZUMBIN
NARRATHTHIN NERIYAY, CHEYAY, NANIYANE
MARRAM MANAM KAZIYA NINRA MARAIYONE                  
 
KARANDHA PAL KANNALODU NEYGALANDHAR POLACH
CHIRANDHADIYAR CHINDHANAIYUL THENURI NINRU
PIRANDHA PIRAPPU ARUKKUM ENGAL PERUMAN
NIRANGAL OR AINDHU UDAIYAY, VINNORGAL ETHTHA
MARAINDHIRUNDHAY, EMBERUMAN  VALVINAIYEN THANNAI      
 
MARAINDHIDA MUDIYA MAYA IRULAI
ARAMBAVAM ENNUM ARUM KAYIRNAL KATTI
PURAMDHOL PORTHTHU ENGUM PUZU AZUKKU MUDI,
MALAM CHORUM ONBADHU VAYIL KUDILAI
MALANGAP PULAN AINDHUM VANYCHANAIYAICH CHEYYA,             
 
VILANGU MANATHTHAL, VIMALA  UNAKKU
KALANDHA ANBAGIK KACHINDHU UL URUGUM
NALAM THAN ILADHA CHIRIYERKU NALGI
NILAM THANMEL VANDHU ARULI NILGAZALGAL KATTI,
NAYIR KADAIYAYK KIDANDHA ADIYERKUTH                 
 
THAYIR CHIRANDHA THAYA ANA THATHTHUVANE
MACHARRA CHODHI MALARNDHA MALARCHCHUDARE
THECHANE THEN ARAMUDHE  CHIVABURANE
PACHAMAM PARRU ARUTHTHUP PARIKKUM ARIYANE 
NECHA ARULBURINDHU NENYCHIL VANYCHAM KEDAP             
 
PERADHU NINRA PERUNGARUNAIP PORARE
 ARA AMUDHE  ALAVILAP PEMMANE
ORADHAR ULLATHTHU OLIKKUM OLIYANE
NIRAY URUKKI EN ARUYIRAY NINRANE 
INBAMUM THUNBAMUM ILLANE  ULLANE                  
 
ANBARUKKU ANBANE  YAVAIYUMAY ILLAIYUMAY
CHODHIYANE  THUNNIRULE  THONRAP PERUMAIYANE
 ADHIYANE  ANDHAM NADUVAGI ALLANE
IRTHTHU ENNAI ATKONDA ENDHAI PERUMANE
KURTHTHA MEY NYANATHTHAL KONDU UNARVAR THAMGARUTHTHIL   
 
NOKKARIYA NOKKE NUNUKKARIYA NUN UNARVE
POKKUM VARAVUM PUNARVUM ILAP PUNNIYANE
KAKKUM EN KAVALANE  KANBARIYA PER OLIYE
 ARRINBA VELLAME ATHTHA MIKKAY NINRA
THORRACH CHUDAR OLIYAY CHOLLADHA NUN UNARVAY        
 
MARRAMAY VAIYAGATHTHIN VEVVERE VANDHU ARIVAM
THERRANE  THERRATH THELIVE  EN CHINDHANAI UL
URRANA UNNAR AMUDHE  UDAIYANE
VERRU VIGARA VIDAKKU UDAMBIN ULGIDAPPA
 ARREN  EM AIYA ARANE O ENRU ENRU                
 
POTRIP PUGAZNDHIRUNDHU POYGETTU MEY ANAR
MITTU INGU VANDHU VINAIPPIRAVI CHARAME
KALLAP PULAKKURAMBAIK KATTU AZIKKA VALLANE
NAL IRULIL NATTAM PAYINRU ADUM NADHANE
THILLAI UL KUTHTHANE  THENBANDI NATTANE             
 
ALLAL PIRAVI ARUPPANE  O ENRU
CHOLLARKU ARIYANAICH CHOLLITH THIRUVADIKKIZ
CHOLLIYA PATTIN PORUL UNARNDHU CHOLLUVAR
CHELVAR CHIVABURATHTHIN ULLAR CHIVAN ADIKKIZP
PALLORUM ETHTHAP PANINDHU !!                
 
THIRUCHCHIRRAMBALAM
 



சிவபுராணம்


நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க !!


வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க

புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க

கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க

சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க !!


ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி

தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி !!


ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற

அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்

சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை

முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் !!


கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி

எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி

விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,

எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்

பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன் !!


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் !!


எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே


வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா

பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி

மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே !!


ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்

நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம்

மனம் கழிய நின்ற மறையோனே !!


கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்

சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று

பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்

நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள்

ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை !!


மறைந்திட மூடிய மாய இருளை

அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி

புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,

மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப்

புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய!!


விலங்கும் மனத்தால், விமலா உனக்கு

கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்

நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி

நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் !!


தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே

பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே

நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் !!


பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே

நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே

இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே !!


அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்

சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே

கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் !!


நோக்கரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே

காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே

ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் !!


மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே

வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே

என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே

உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின்

உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று !!


போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்

மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப்

புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே

நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே

தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே !!


அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று

சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார்

சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து !!


திருச்சிற்றம்பலம்




Link for the above Song : 
http://www.fulfillr.com/music/gallery/SIVAPURANAM-SIVAPURANAM-MP3-Siva-Puranam-Mp3-Song-Siva-Purananam

Tags:  Sivapuranam-mp3, Sivapuranam-lyrics, Sivapuranamintamillyrics, Sivapuranam-in-english-lyrics, Chivapuranamlyrics, Chivapuranam-mp3, Chivapuranamintamillyrics


 

Copyright © 2012 Fulfillr.com.